தாராபுரம் அருகே மோளரபட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - நள்ளிரவில் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்

மோளரப்பட்டி பகுதிக்கு கொண்டுவரப்படும் டாஸ்மார்க் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என ஊர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் ஒன்றியம் மோளரபட்டி ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மோளரபட்டி ஊர் பொதுமக்கள் இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தவர்கள் டாஸ்மார்க் மேலாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் திடீரென தாராபுரம்-பூளவாடி சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மோளரபட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் மனோகரன் தெரிவிக்கையில், தேர்பாதை கிராமத்தில் அரசு டாக்ஸ்மார்க் கடை ஏற்கனவே கடை எண் 3830 என்ற பெயரில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள உப்பாறு அணை - தாராபுரம் செல்லும் மெயின் சாலையில் இயங்கி வருகிறது. அங்கு தற்போது நடந்து வரும் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர்.

அதன் பிறகு தேர்பாதை கிராமத்தில் தற்போது செயல்பட்டு வரும் பிரச்சனைக்குரிய டாஸ்மார்க் கடையை மோளரப்பட்டி கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்காக தனியார் விவசாய நிலத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே டாஸ்மார்க் மேலாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்திருந்தோம்.

மேலும் இங்கு அருகாமையில் கோவில், பள்ளிக்கூடம் உள்ளது. மேலும் மோளரப்பட்டி பிரதான சாலையாக உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் விவசாய வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே இங்கு டாஸ்மார்க் கடையை அமைப்பதால் ஊர் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே மோளரப்பட்டி பகுதிக்கு வரும் டாஸ்மார்க் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் இரவு பகலாக பொதுமக்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் கட்சி அரசியல்வாதிகள், ஒன்றிய செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோர் சுய லாபத்திற்காக அதிகாரிகள், துணை போனால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...