கோவையில் வரும் 10ஆம் தேதி தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி - மாவட்ட ஆட்சியர் தகவல்

கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (மார்ச்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி என்ற தலைப்பில், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சரின் திட்டங்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், வருகின்ற அன்று (10.03.2024) ஒருவாரத்திற்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில், தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மக்களுடன் முதல்வர், மக்களை தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், இக்கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியினை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வருகின்ற (10.03.2023) அன்று மாலை 6மணிக்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தொடங்கிவைத்து பார்வையிட உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த இப்புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...