காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் நபர் வாகன இன்சூரன்ஸ் உயர்வு, வட்டார போக்குவரத்தக் கழக அலுவலகங்களில் கட்டண உயர்வு, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, காலவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கதினர் கூறுகையில், இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் லாரிகள் ஓடாது எனவும், இதனால் நாள் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் பால், தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைபடாது என தெரிவித்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என கூறினர்.

அதேபோல் தொழிற்துறையினர், வியாபாரிகள், எளிய ரக வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...