கோவை கோவில்பாளையத்தில் இரத்தினம் கல்லூரி துவக்கம்

கல்வி வளாகம் வெறும் கட்டிடமாக அல்லாமல் மாணவர்களின் கற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் ஒரு இடமாக விளங்கும் என்று இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் கல்லூரி துவக்க விழாவில் பேசினார்.


கோவை: கோவை மாநகரின் மத்தியில் 50 வருடத்துக்கும் மேலாக கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் இரத்தினம் கல்விக் குழுமங்கள் சார்பில் கோவில்பாளையத்தில் இரத்தினம் டிப்ஸ் குளோபல் கல்லூரி திறக்கப்பட்டது. விழாவிற்கு இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில், இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் இரா.மாணிக்கம், இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் பா.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் நடிகர் ஆரி அர்ஜுனன், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் பேசுகையில், இந்த கல்வி வளாகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கட்டிடடவியல் கல்லூரி மற்றும் மேலாண்மைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் அமைத்திருப்பதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறனும், பல பிரச்சனைகளுக்கு பல்வேறு கோணங்களில் தீர்வு காணும் திறனும் மேம்படும் என்றும், இந்த கல்வி வளாகம் வெறும் கட்டிடமாக அல்லாமல் மாணவர்களின் கற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் ஒரு இடமாக விளங்கும் என்று கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...