கோவை சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு

ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.



கோவை: கோவையில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய இந்த ரோடு ஷோ ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்தது.



அப்போது வழி நெடுகிலும் இருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்களுக்கு கைகளை அசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.



நிறைவுப் பகுதியான ஆர்.எஸ்.புரத்தில் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.



அவருடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், எச்.ராஜா பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது எஸ்.ஆர். சேகர் சிறிது நேரம் மோடியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இது குறித்து பேட்டியளித்த எஸ்.ஆர். சேகர் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி மோடியிடம் கூறியதாகவும் அப்போது மோடி அது பற்றி தனக்கும் தெரியும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...