ஓய்வூதியர்களுக்கு இணையதளம் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்று

தமிழ்நாடு அரசு கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியர்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 முதல் ஜுன் 30க்குள் கருவூலத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது தங்களது உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வருடம் முதல் கூடுதல் வசதியாக ஜீவன் பிரமான் என்ற மத்திய அரசின் உயிர்வாழ் சான்றினை பெற்று கருவூல இணையதளத்தில் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

ஜீவன் பிரமான் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் கருவூலத்தில் அளிப்பதற்கான நடைமுறைகள்:-

1. தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.

2. ஆதார் எண், ஓய்வூதிய கொடுவை எண், ஓய்வூதியம் அனுப்பும் அலுவலக விவரம் உள்ளிட்டவற்றை அரசு இ-சேவை மையத்தில் அளிக்க வேண்டும்.

ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக அனுப்பப்படுகின்ற உயிர்வாழ் சான்றுகள் உரிய கருவூலத்தில் அல்லது ஓய்வூதிய அலுவலகத்தில் சரிபார்த்து பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

ஜீவன் பிரமான் இணையதளத்தில் உயிர்வாழ் சான்றினை, ஓய்வூதியர்களுக்கு உரிய வசதிகள் இருப்பின் தனிப்பட்ட முறையிலும், மின்னணு உயிர்வாழ் சான்றினை ஜீவன் பிரமான மூலமாக அளிக்கலாம். அவை கருவூலத்தில் சரிபார்க்கப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...