நீலகிரி தொகுதியை பொறுத்தவரை மோடிஜியா, 2ஜியா என்ற போட்டி நிலவுகிறது - மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி

மேலும், பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதை, பிரதமரின் ரோடு சோ மற்றும் திருப்பூர், சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மாநாடுகள் மூலம் அனைவரும் அறிந்துள்ளதாக கூறினார்.


திருப்பூர்: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவினாசியில் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள ரோட்டரி மஹாலில் அவினாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், மத்திய அரசின் 10 ஆண்டுக்கால சாதனைகளையும் மாநில அரசின் மூன்று ஆண்டுக்கால ஊழல் அவலங்களையும் மக்களிடம் கொண்டு சென்று பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், நீலகிரி தொகுதி மக்கள் திமுக வேட்பாளரை கண்டு வெட்கி தலை குனிகிறார்கள். 2 ஜி வழக்கின் குற்றப் பின்னணி உடையவர், சனாதனம் பட்டியலின மக்களின் ஒரு தரப்பினரையும், பெண்கள் என பல தரப்பு மக்களையும் அவதூறாகப் பேசும் வேட்பாளரை பெற்றதால் அவர்கள் வெட்கி தலை குனிகிறார்கள் என்றார்.

மேலும், பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதை பிரதமரின் ரோடு சோ மற்றும் திருப்பூர் சேலம் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மாநாடுகள் மூலம் அனைவரும் அறிந்துள்ளார்கள். நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் 2ஜி வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது எனவும் பேட்டி அளித்தார். மேலும், நீலகிரி தொகுதியை பொருத்தவரை மோடி ஜி ஆயா 2 ஜியா என்ற போட்டி தான் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...