திருப்பூரில் பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் உள் பனியன் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல்..!

மேலும், தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.


திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்த அவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள் பனியன் அணிந்தபடியும் திருப்பூரின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நூல் மற்றும் ஜமக்காளம் ஆகியவற்றை தட்டில் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த காலங்களில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய அரசுக்கும் புரிந்துணர்வு இல்லாததின் காரணமாக திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், தான் வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதே நேரத்தில் திருப்பூரில் பிரதான கோரிக்கையான நூல் விலையை கட்டுப்படுத்த, நூல் உற்பத்தியை முறைப்படுத்தி நலிவடைந்த தொழில்களை மீட்டெடுக்க மூன்றாம் முறையாக மத்தியில் பொறுப்பேற்கும் மோடி தலைமையிலான அரசிடம் குரல் கொடுத்துப் பெற்றுத் தருவோம் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு பாஜகவை ஒடுக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கூட பாஜகவுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...