தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக வேட்பாளர் பிரகாஷூக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ், அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது, கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீரை அரசூர் சட்ட வழியாக திறந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இடம் ஏழு முறை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் ஒருமுறை கூட கலெக்டர் உப்பாறு பாசன விவசாயிகள் இடம் பேசவில்லை. இதனால் நீதி கிடைக்க வேண்டும் என உப்பாறு பாசன விவசாயிகள் கெத்தல்ரேவ், தேர்பாதை, பனமரத்து பாளையம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், தொப்பம்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டியும் , வராதே! வராதே! ஓட்டுக் கேட்டு ஊருக்குள்ளே வராதே! உப்பாறு அணைக்கு உயிர் நீர் கேட்டு போராடும் போது வராதவர்கள். இன்று, உங்கள் தேவைக்கு ஓட்டுக் கேட்க மட்டும் வராதே!வராதே! ஓட்டுக் கேட்டு யாரும் ஊருக்குள்ளே வராதே என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு தற்போது பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது அங்கு காத்திருந்த உப்பாறு பாசன விவசாயிகள் கையில் கருப்புக்கொடி காட்டி அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டவாரு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்‌.



இதனை தொடர்ந்து தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கோரி வந்தார். இந்த நிலையில் வேட்பாளர் பிரகாஷ் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்றார். இதனால் தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை என்ற இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...