படியூர் சோதனை சாவடியில் முதல்வர் ஸ்டாலின் படம் பதித்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 4000 டி சர்ட்டுகள் பறிமுதல்

காங்கேயத்தில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த வாடகை ஆட்டோவில் எடுத்துவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 4000 டி சர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் பொதுதேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூபாய் 50,000 க்கு மேல் ரொக்க பணம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லும் நபர்களை கண்காணிக்க தேர்தல் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காங்கேயம் அருகே படியூர் சோதனைச் சாவடியில் சங்கீதா மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவலர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காங்கேயத்தில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த வாடகை ஆட்டோவை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.



சோதனையில் சரவணன் என்பவர் வாகனத்தில் உரிய ஆவனங்கள் இல்லாமல் திருப்பூருக்கு கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு முத்திரை பதித்த முதல்வர் ஸ்டாலின் படம், கலைஞர் படம் பதிக்கப்பட்ட மஞ்சள், கருப்பு நிறம் கொண்டிருந்தது.



மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் என்ற எழுத்துக்களும் அச்சிடப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 4000 டி - சர்ட்டுகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாடகை ஆட்டோவில் டீசர்ட்கள் வாகனத்தில் வந்தது என்பதும் காங்கேயத்தில் தயாரிக்கப்பட்டு திருப்பூருக்கு கொண்டு செல்வதாகவும் ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து தேர்தல் பறிமுதல் செய்த 4000 டிஷர்ட்டுகளை காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...