பிறந்து 3 நாட்களான ஆண் குழந்தை பிஏபி வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு

பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் மிதந்து வந்த பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலை பொத்தியம் பாளையம் பிரிவில் பிஏபி கிளை வாய்க்கால் செல்கிறது. (பரப்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால்). பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பொத்தியம் பாளையம் பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் மிதந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் இறந்து அழுகிய நிலையில் தண்ணீரில் மிதந்து வந்த அந்த அடையாளம் தெரிய தெரியாத ஆண் குழந்தையை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காங்கயம் காவல் ஆய்வாளர் கூறியதாவது,அடையாளம் தெரியாத இந்த குழந்தை எங்கிருந்து தண்ணீரில் அடித்துவரப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் குழந்தையின் பெற்றோர்கள் யார் என்பதையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த குழந்தையை பார்க்கும் பொழுது பிறந்து 2 முதல் 4 நாட்களுக்குள் தான் இருக்கும் என்றும், குழந்தையை கடந்த 24 மணி நேரத்திற்குள் தான் தண்ணீரில் பெற்றோர்கள் வீசி எறிந்து இருக்க முடியும் என்றும் சந்தேகிக்கிறோம்.

மேலும் இந்த குழந்தையை பற்றிய தகவல் யாரேனும் அறிந்திருந்தால் உடனடியாக காங்கயம் காவல் ஆய்வாளர் (விவேகானந்தன் -94981 89123)ஐ அணுக வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...