வடவள்ளி பகுதியில் செல்பி எடுத்ததை காட்டி பெண்னை பாலியல் உறவுக்கு அழைத்த நபர் கைது..!

வடவள்ளி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவரது கடை அருகே இருந்த பெண்ணிடம், செல்ஃபி புகைபடத்தை காட்டி பாலியல் உறவுக்கு வருமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். விசாரணையில், அவர் மீது வழக்கு தொடர்ந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


கோவை : கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி.. இவர் அப்பகுதியில் டீக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் எதிரே 46 வயது பெண் ஒருவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.

இந்த நிலையில்,இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி போட்டோவை அந்த பெண்ணிடம் காட்டி பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்து கருப்பசாமி டார்ச்சர் கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து கருப்பசாமியை கண்டித்து வந்துள்ளார்.

இதற்கிடையே அந்த பெண் தனது கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது,அங்கு வந்த கருப்பசாமி அவரிடம் மீண்டும் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது . சம்பவம் குறித்து அப்பெண் வடவள்ளிகாவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...