திருப்பூர் அருகே காரும் , அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..!

60 வது திருமண நாளை திருக்கடையூரில் கொண்டாடிவிட்டு, மீண்டும் திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த சந்திரசேகர் - சித்ரா தம்பதியினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காரில் பயணித்த அதே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டும் படுகாயங்களுடன்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் சித்ரா தம்பதியினரின், அவர்களது 60-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக, நேற்றைய தினம் திருக்கடையூர் சென்று விட்டு மீண்டும் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 



இன்று அதிகாலை வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சந்திரசேகரின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது, என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதில் காரில் பயணித்த சந்திரசேகர், சித்ரா, இளவரசர், அரிவித்ரா, மூன்று மாத குழந்தை சாக்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த மற்றொரு நபர் படுகாயர்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

இந்த விபத்து காரணமாக, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பதிலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வெள்ளகோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கார் மற்றும் பேருந்தைமீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...