கோவை செட்டிபாளையத்தில் திமுக தேர்தல் பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

வருகிற 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி எம்பி., இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய‌ உள்ளனர்.


கோவை: கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், வருகிற 12-4-2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பி., இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற தேர்தல்-2024, இந்தியா கூட்டணி திமுக கழக‌ கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி, தேர்தல் பிரச்சாரம் செய்ய‌ உள்ளனர்.



இந்த நிலையில், கோவை, செட்டிபாளையம் L&T பைபாஸ் சாலையில், மைதானத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ள இடத்தை, இன்று ஏப்ரல்.10 தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.



உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...