சிசு பராமரிப்பு குவிஸ் போட்டியில் கேஎம்சிஎச் குழு தேசிய சாம்பியன்

தேசிய சிசு மன்றம் சார்பில் இந்துாரில் நடந்த தேசிய கருத்தரங்கில், நடந்த வினாடி வினா போட்டியில் கேஎம்சிஎச் மருத்துவர்கள் வி.பவித்ரா, என்.பிரதீபா குழுவினர் சாம்பியன் வெற்றி பெற்றனர்.

பிறந்த சிசுக்களை கவனிப்பதில் செவிலியர்களின் பங்கு மகத்தானது. உலகெங்கிலும் சிசு தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் கவனிப்பு தான் மிக மிக முக்கியமானது. மிகவும் உயர்தரமான கவனிப்பு என்பது குழந்தையின் நலன் பற்றி அறிய நன்குபடித்த செவிலியரால் மட்டுமே முடியும்.

சிசு பராமரிப்பு, மருத்துவம் பற்றி செவிலியர்களின் திறனை பரிசோதிக்க தேசிய அளவல் ஒரு வினாடி வினா நிகழ்ச்சி இந்துாரில் நடைபெற்றது. இதில், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, தரமான சிசு பராமரிப்பு தரும் மருத்துவமனைகளுள் ஒன்று என நிருபித்துள்ளது.



சிசு பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் ஏ.ஆர்.சீனிவாசன், மருத்துவர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி, இத்தகைய வெற்றி பெற செவிலியருக்குகற்றுக் கொடுத்துள்ளனர்.

தேசிய சிசு பராமரிப்பு மன்றம் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் சிசு பராமரிப்பு பற்றிய குவிஸ் போட்டியை நடத்தி வருகிறது. சிசு பராமரிப்பில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் இப்போட்டியில் பங்கேற்று தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தி வருகின்றனர். இது பல்வேறு கட்ட போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட போட்டிகள் கோவையிலும், மண்டல அளவிலான போட்டிகள் சென்னையிலும் நடந்தன. இதில், வி.பவித்ரா மற்றும் என்.பிரதிபா ஆகியோர் போட்டியில் பங்கேற்றதோடு, இந்துாரில் நடந்த தேசிய அளவிலான சிசு பராமரிப்பு கருத்தரங்கையொட்டி நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றுள்ளனர்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறது. சென்ற ஆண்டும் இறுதிப்போட்டியில் 3-வது பரிசை வென்றது. இந்த ஆண்டு முதல் பரிசை பெற்று, தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை பெற்று தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...