உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதிய விபத்தில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்த செந்தில்குமாரி என்ற பெண் லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கம் பகுதியில் உள்ள ஒரு துக்க வீட்டில் நேற்று உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதியது.



அத்துடன் துக்க வீட்டு முன்னாள் நின்றிருந்த பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய செந்தில்குமாரி (வயது 48) என்ற பெண் பரிதாபமாக பலியானார். மேலும் பலத்த காயமடைந்த ஈஸ்வரி, சுப்புலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் லாரியை ஓட்டி வந்த ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். உடுமலை அருகே துக்க வீட்டில் காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...