கோவை ஆட்சியர் கூறியும் பாதுகாப்பு வழங்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் கண்ணீருடன் புகார்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும், இது நாள் வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது கண்ணீர் மல்க தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்ற வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு ஹெல்மெட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தனக்கு உயிர் பாதுகாப்பு வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

அவரது மனு மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியரும் கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என நூர்முகமது குற்றம் சாட்டியுள்ளார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அவரது பிரச்சார வாகனத்துடன் இன்று ஏப்ரல்.13 வந்த நூர் முகமது, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும், இது நாள் வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிடும் போதும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...