ஆர்.எஸ்.புரத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்க முடியவில்லை – உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பதிலடி

ஆனைமலை நல்லாறு திட்டத்தை மாநில அரசுகள் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என்ற தவறான செய்தியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாக பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கிழவன் காட்டூர், இளைய முத்தூர், கல்லாபுரம் உட்பட முப்பதுக்கு மேற்பட்ட இடங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் செய்தியாளரிடம் கூறும் பொழுது, கடந்த சில தினங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் பகுதியில் நாடளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு தான் போட்டி பாஜக வைப்புத் தொகை கூட பெற முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியது குறித்து கேட்டதற்கு, கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அதிமுகவிற்கு பூத் கமிட்டிக்கு ஆட்கள் போட முடியாத ஒரே கட்சி அதிமுக. ஆகையால் இவர்கள் பாஜக பற்றி குறை கூறுவதற்கு தகுதி இல்லை என பதிலடி கொடுத்தார்.



மேலும் பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைமலை நல்லாறு திட்டத்தை மாநில அரசுகள் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என வாக்குறுதி அளித்து வருகிறார்கள். இது தவறான செய்தி. மாநில அரசுகள் தான் அமைக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், ஆனைமலை நல்லாறு திட்டத்தை பாஜக மட்டும் தான் அமைக்க முடியும்.



கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோமாவில் இருந்தாரா அப்பொழுது நிறைவேற்றி இருக்கலாமே என வசந்த ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், திருப்பூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் மடத்துக்குளம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வக்கனி, கல்லாபுரம் ஊராட்சி கிளை சோமகுமார், ஒன்றிய இணை செயலாளர் மோகன், பூளவாடி கிளை செயலாளர் மாரிமுத்து, பூச்சிமேடு காளிமுத்து, இந்திரநகர் லட்சுமணன், வேல்நகர் கிளை செயலாளர் பரமேஸ்வரன், மாவளபாறை வெங்காடச்சலாம், கோபலபுரம் கிளை செயலாளர் செல்லமுத்து, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்லம்ம்மாள், உடுமலை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பட பிரிவு குமரேசன் மற்றும் பலர் கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...