பராமரிப்பு பணி காரணமாக கோவை-சென்னை இன்டர்சிட்டி ரயில் சேவையில் மாற்றம்

கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை - சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் வருகிற 17, 24, 30 ஆகிய தேதிகளில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி கோவையிலிருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி ரெயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது.

இதுபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 30-ந் தேதி சென்னையில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து கோவை வரை இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று (ஏப்ரல்.15) தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...