தேர்தல் விழிப்புணர்வு குறித்து கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறுந்தகடு வெளியீடு

எங்கெங்கெல்லாம் 60 சதவீதத்திற்கும் கீழ் வாக்குப்பதிவானதோ, அங்கு அழைப்புதல் தருவது, உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்து தொகுக்கப்பட்ட குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.



இதனை கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பெற்று கொண்டனர்.



இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எங்கெங்கெல்லாம் 60% க்கும் கீழ் வாக்குப்பதிவானதோ, அங்கு அழைப்புதல் தருவது, உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு ஆவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் ஒரு சாமியானா, வீல் சேர், போன்ற குறிப்பிட்ட வசதிகள் இருப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...