உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள் முழங்க வானவேடிக்கை உடன் உடுமலை - பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் நிகழ்வாக பூச்சொரிதலும் அதைத் தொடர்ந்து நோன்பு சாட்டுதலும் நடைபெற்றது. 2-வது நிகழ்வாக கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள், வானவேடிக்கை முழங்க உடுமலை- பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.



அதைத் தொடர்ந்து கம்பம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பீடத்தில் போடப்பட்டது. பின்னர் பூவோடு கோவிலை மூன்று முறை வலம் வந்து கம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கம்பத்திற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...