கோவையில் பாஜகவினர் ஓட்டுக்காக பணம் வழங்கும் முயற்சியில் பிடிபட்டனர்

கோவையில் பூலுவபட்டியில் நள்ளிரவில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சித்த போது பறக்கும் படையினரால் ரூ. 81,000 பணம் மற்றும் பூத் ஸ்லீப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore:

கோவை மாவட்டம் பூலுவபட்டியில் நள்ளிரவு, பாஜகவினர் பல்வேறு வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சித்த போது, பறக்கும் படை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரூ. 81,000 மற்றும் பூத் ஸ்லீப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நபர்கள் வார்டு எண் 12, 13, 14, 15 பகுதிகளில் பணம் விநியோகிக்கப்படுவதாக திட்டமிட்டிருந்தனர். சென்றவர்களில் ஆலந்துறை பாஜகவின் மண்டல் தலைவர் ஜோதிமணி ஆகியோர் பெருமளவில் பணம் பதுக்கியிருந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

பாஜகவை சார்ந்த நபர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்டத் தேர்தல் கட்டுப்பாடு அறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சோதனையில்பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்







கோவை மாவட்டம் பூலுவபட்டிமாரியப்பன் டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பிடித்தனர்.







வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகமாவட்ட தேர்தல்கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பறக்கும் படையினர், ஆலந்துறை பாஜகவின்மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர்வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணத்தை பிடித்து, பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பிடிக்கும் பொழுது வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப் கையில் இருந்ததையும் கைப்பற்றினர்.

பூலுவபட்டி பஞ்சாயத்தில் வார்டு எண் 12,13,14,15 ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாகவும், அடுத்த வார்டுகளுக்கு பணம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...