கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (ஏப்ரல்.19) தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டில் இன்று ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிறது. ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் (ஜூன்.4) தேதி வெளியாக உள்ளது. நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மதியம் மிகவும் வெயில் இருக்கும். எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வெயில் வரும் முன்பே வாக்களிக்கச் செல்லுங்கள் என்று கூறினார்.

மேலும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். எனவே வாட்டர் பாட்டிலில் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...