கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (ஏப்ரல்.19) தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டில் இன்று ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிறது. ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் (ஜூன்.4) தேதி வெளியாக உள்ளது. நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மதியம் மிகவும் வெயில் இருக்கும். எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வெயில் வரும் முன்பே வாக்களிக்கச் செல்லுங்கள் என்று கூறினார்.

மேலும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். எனவே வாட்டர் பாட்டிலில் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...