திமுக அரசின் சாதனைகளுக்கு பெண்கள் மிக பெரிய ஆதரவு - பொள்ளாச்சியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமி பேட்டி

திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.


கோவை: தமிழக முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1715 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற வேட்பாளர் ஈஸ்வரசாமி அங்குள்ள வாக்குசாவடி அதிகாரிகளிடமும், திமுக முகவர்களிடமும் வாக்குப்பதிவு குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி, காலை 6 மணி முதல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் கடந்து 3 ஆண்டுகளாக திமுக அரசு செய்த திட்டங்களுக்கும், சாதனைக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...