கோடை விடுமுறை காலத்தில் கோவை - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையையொட்டி கோவை - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவைகள் ஏப்ரல் 23 முதல் ஜூன் 28 வரை இயங்கும். இந்த ரயில் பல முக்கிய நிலையங்களில் நிற்கும்.


கோவை: சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் 20 அன்று அறிவித்துள்ளபடி, கோவை மற்றும் பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. ஏப்ரல் 23 முதல் ஜூன் 25 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவையில் இருந்து காலை 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06059) வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பரௌனி நிலையத்தில் இருந்து ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் பரௌனி - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06060) திங்கள்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடை, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்றும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...