குளத்துப்பாளையம் பகுதியில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம், சென்னையை சேர்ந்த கோகுல், திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் ஏப்ரல்.25ம் தேதி அன்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (வயது 27), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம் (வயது 27), சென்னை கோகுல் (வயது 23), திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ( வயது 24) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்த போதைப் பொருள், கஞ்சா, 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு பேரையும் கோவை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...