கோவையில் EVM இயந்திரங்கள் பாதுகாப்பு - ட்ரோன்கள் பறக்கவிட தடை

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட EVM இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 



இந்த EVM இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அந்த பகுதிகளில் ட்ரோன்களை இயக்க அல்லது பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையார்பாளையம், வடகோவை, ஆர் எஸ் புரம், பூசாரி பாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி என் புதூர் மற்றும் இப்பகுதிகளின் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிக RED ZONE (NO FLY ZONE) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



அதன்படி (28.04.2024 காலை 06.00 மணி முதல் 02.05.2024 காலை 06.00 மணி வரை), 96 மணி நேரம் ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...