கோவையில் EVM இயந்திரங்கள் பாதுகாப்பு - ட்ரோன்கள் பறக்கவிட தடை

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட EVM இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 



இந்த EVM இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அந்த பகுதிகளில் ட்ரோன்களை இயக்க அல்லது பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையார்பாளையம், வடகோவை, ஆர் எஸ் புரம், பூசாரி பாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி என் புதூர் மற்றும் இப்பகுதிகளின் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிக RED ZONE (NO FLY ZONE) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



அதன்படி (28.04.2024 காலை 06.00 மணி முதல் 02.05.2024 காலை 06.00 மணி வரை), 96 மணி நேரம் ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...