மே தினத்தை முன்னிட்டு உடுமலையில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் - தொண்டர்கள் பங்கேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கிட கிருஷ்ணா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் சிறப்புரை ஆற்றினார்.



அப்போது மோகன் பேசியாதவது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என பேசினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் முன்பு சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எல்லம்மாள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன், சிஜடியூ தலைவர் கனகராஜ், சிபிஐஎம் உடுமலைநகரச் செயலாளர் பாலதண்டபாணி ரங்கநாதன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...