கோவையில் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: காவல்துறை துணை ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்

எஸ்.என்.எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புடன் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தினர்.



இன்று காலை கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த பேரணி பந்தயசாலை காவல் நிலையத்தில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தை அடைந்தது.



முன்னதாக மாணவர்களிடம் துணை ஆணையர் சரவணன் பேசுகையில், ‘கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் 34 மாணவர்கள் உயிரிழந்தனர். 

போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததாலே இந்த விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்க இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாணவர்களே விழிப்புணர்வு பேரணியை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

இந்த பேரணியில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார்,  காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...