கோவை மேயர் வீடு அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீர் வாரிய பொறியாளரிடம் வாக்குவாதம்

பணத்தை வாங்கிக்கொண்டு லாரிகளில் வரும் குடிநீரை, முக்கிய நபர்களுக்கு மட்டும் விநியோகிப்பார்கள். அந்த குடிநீருக்கும் கட்டணம் வசூலிப்பார்கள். அதனால் குடிநீர் குழாய்கள் வழியாக மட்டும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குடிநீர் வாரிய பொறியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை கணபதி, பூசாரிபாளையம் பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை என்றும், மாநகராட்சி ஊழியர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் இன்று (மே.3) சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இந்தப் பகுதியில் கோவை மாநகராட்சி மேயர் குடியிருக்கும் வீடு உள்ளது. இதனை அடுத்து உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் இளங்கோ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.



அப்பொழுது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரிகளில் வரும் குடிநீர் பணத்தை வாங்கிக் கொண்டு முக்கிய நபர்களுக்கு மட்டும் விநியோகிப்பார்கள்.

மேலும் அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதனால் குடிநீர் குழாய்கள் வழியாக மட்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...