கோவை மாநகராட்சி சார்பில் சிங்காநல்லூர் சிக்னலிலும் பசுமை பந்தல் அமைப்பு - மக்கள் மகிழ்ச்சி

கண்ணப்பன் நகரை தொடர்ந்து சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், வசந்த் அண்ட் கோ அருகே உள்ள சிக்னலிலும் பசுமை பந்தல் இன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்,கோவையில் சிக்னல்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிங்காநல்லூர் சிக்னலிலும் இந்த பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.



இந்த நிலையில் கோவை கடந்த சில ஆண்டுகளாகவே 'ஹாட்டாக' இருந்து வந்தது. இந்தாண்டு இன்னும் உக்கிரமாக 100 டிகிரி -பாரன்ஹீட் வெப்பம் சர்வ சாதாரணமாக கோவை மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசு மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்கள் தாகம் தணித்து வருகின்றனர்.

வெயிலில் குறிப்பாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கண்ணப்பன் நகர் சிக்னலில் முதல் கட்டமாக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.



முதல் கட்டமாக 10 இடங்களில் இதனை அமைக்க உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்த நிலையில் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், வசந்த் அண்ட் கோ அருகே உள்ள சிக்னலில் (சிங்காநல்லூர் சிக்னல்) இந்த பந்தல் தற்போது (மே.4) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...