கோவையில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று - சில இடங்களில் லேசான மழை

இன்று மாலையில் கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசியது. செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று (04-05-2024) அக்னி நட்சத்திர வெயில் காலையிலிருந்து மதியம் வரை வெளுத்து வாங்கியது. ஆனால் மதியத்துக்கு பிறகு வெயிலானது சற்று தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து கோவையில் இன்று மாலை திடீரென்று வெயிலின் தாக்கம் குறைந்து பலத்த காற்று வீச தொடங்கியது. கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் புழுதி காற்றுடன் கூடிய சூறாவளிக்காற்று வீசியது.செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

மேலும் கோவையின் பெரும்பாலான இடங்களில் இன்று மே.4 பலத்த காற்று மட்டுமே வீசியது. இதன் காரணமாக கோவை மாநகரில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...