உடுமலையில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

உடுமலை நகரப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 14.797 கிலோ கிராம் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வாஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது உடுமலை நகரப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கட்டாராம் சவுத்ரி(38), சுரேஷ்குமார்(23), தயாராம் (23), சாந்தாராம்(20), உடுமலை தாலுக்கா உரல் பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(32) ஆகியோர் கணேஷ், கூலிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 14.797 கிலோ கிராம் அளவிலான போதை வாஸ்துக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை வாஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...