கோவை கிராமப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் சோமனூர் அருகேயுள்ள இராமாச்சிபாளையம் பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து, கிராமப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இராமாச்சிபாளையம் பகுதியில் உள்ள கோவை- சூலூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த மறியலின் போது, மதுபானக்கடை அமையவுள்ள சாலையில் பள்ளிகள் மற்றும் கோவில்கள் இருப்பதால் அவ்வழியே செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனவும், குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்க கூடாது என வலியுறுத்தினர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி மதுபானக்கடை அமைக்கப்படாது என உத்திரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக கோவை- சூலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை கிராமப்பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...