குன்னூரில் சாலை விபத்தில் மாணவர் பலி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்- விஜி தம்பதியினரின் மகன் தர்சன். தற்போது நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு தேர்வினை எழுதியுள்ளார். 

இந்நிலையில், இன்று இருசக்கர வாகனத்தில் குன்னூர், காந்திபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வளைவில் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி இவரது வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய தர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றார்.



மேலும், இவ்விபத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பதியினருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர் தர்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், உயிரிழந்த மாணவர் தற்போதே 10-ம் வகுப்பு தேர்வு எழுதிள்ளதால் அவருக்கு 15 முதல் 16 வயதே இருக்கும். அவரிடம் வாகனம் ஓட்டுநர் உரிமம் இல்லை. விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகிறோம்' என தெரிவித்தனர்.



பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது விடுமுறை நாட்களை கழிக்க வாகனங்களில் அவ்வப்போது வெளியே செல்ல விரும்புகின்றனர். அவ்வாறு வாகனத்தை இயக்க வேண்டும் என்றால் 18 வயது பூர்த்தியடைந்து வாகன ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் என்பதை அவர்கள் கடைபிடிப்பது இல்லை. இதனால், ஏராளமான சாலை விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது தனி கவணம் செலுத்துவதன் மூலம் இவ்வாறான உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...