பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் அனிருதன் கைது


சென்னையில் பல்வேறு இடங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குநர் அனிருதன் உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே, கோவை, பெங்களூர், கொச்சி மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம், சென்னை பள்ளிக்கரணையில் வீடு கட்டித்தருவதாகக் கூறி 20 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவின் நில மோசடி தடுப்புப் பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, காசா கிராண்டே நிறுவன நிர்வாக இயக்குநர் அனிருதனை கைது செய்த போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை முகப்பேரில் இயங்கிவரும் திரு பிரமோட்டர்ஸ் நிறுவன அதிபர் குமார், வீட்டுமனை வாங்கி தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டவர்களிடம் 3 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகவும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, திரு பிரமோட்டர்ஸ் அதிபர் குமாரையும் கைது செய்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...