செண்டுமல்லி வளர்ப்பின் மூலம் நூற்புழுக்கள் குறைந்து மகசூல் அதிகரிக்கும் என வேளாண்மைப் பல்கலை தகவல்

நூற்புழுக்களின் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாக உள்ளது.  ஒரே வகையான காய்கறிப் பயிரினையோ அல்லது மற்ற பயிரையோ தொடர்ச்சியாக பயிரிடுவதன் மூலம் இத்தகைய நூற்புழுக்கள் மண்ணில் தங்கி இனத்தை பெருக்கி அடுத்தடுத்து பயிர் செய்யும்போது அதிக அளவில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.



காய்கறிப் பயிர்களில் பட்டம் இல்லா நேரத்தில் பயிர்சுழற்சி முறையில் செண்டுமல்லியை பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை நன்றாக கட்டுப்படுத்த முடியும். செண்டுமல்லி வேரிலிருந்து ஆல்பா-டெரிதினைல் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது.

இவ்வேதிப்பொருள் மண்ணில் நூற்புழுக்கள், பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒருசில பூச்சிகளை கொல்லும் உயிர் கொல்லி பண்பினை கொண்டது. இந்த ஆல்பா-டெரிதினைல் மண்ணில் உள்ள நூற்புழுக்கள் மற்றும் மண்ணில் உள்ள உயிர்கொல்லிகளின் முட்டைகளின் மீது வேதியியல் பாதிப்பினை ஏற்படுத்தி முட்டை பொறிக்கும் திறனை பெருமளவு குறைக்கிறது.

இதனால் இவ்வுயிர் கொல்லிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மண்ணில் உள்ள இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படுகிறது. செண்டுமல்லி உயிருள்ள பயிரின் வேரிலிருந்தே ஆல்பா-டெரிதினைல் சுரக்கிறது. ஆதலால் பயிர் சுழற்சி முறையில் காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை ஊடுபயிராக குறுகிய காலத்திற்கு (2-3 மாதம்) பயிரிடுவதால் நூற்புழு கட்டுப்பாட்டில் நல்ல பலனை பெறமுடியும்.  

எனவே காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை பயிர் சுழற்சி செய்து பின்பு கோடை உழவு செய்தல் மூலம் “வருமுன் காப்போம்” என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறிப்பயிர்களால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறமுடியும் என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறை ச.சுப்ரமணியன் மற்றும் கி.பூர்ணிமா தெரிவித்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...