நெடுஞ்சாலைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணியடித்து போராட்டம்

தமிழக நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் சங்கு ஊதி சாவு மணியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு தனியாரிடம் வழங்குவதை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலைப்பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை- திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுங்கி இருப்பதாகவும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம்பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் சாலை பணியாளர்கள் கூறினர்.

மேலும், சாலைபணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக கருத வேண்டும். சாலைபணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வுவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்கள், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...