கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மத்திய சிறை கைதி உயிரிழப்பு

மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிரபு என்ற கைதிக்கு சிறை கைதிகள் வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ரத்தினபுரி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பிரபு (42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டல் வழக்கில் ரத்தினபுரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று (மே.16) சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அங்கு சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...