பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக கோவை வரும் ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும் என்று தென்னகரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்-கோயம்புத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள வஞ்சிபாளையம் ரயில்வே யார்டில் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி ஜங்சன்- பாலக்காடு டவுன் ரயில் (24.05.2024 & 26.05.2024) ஈரோடு-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஈங்கூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.இந்த ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து ஈங்கூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்.

பாலக்காடு நகருக்கு இயக்கப்படாது. ரயில் எண்.18190 எர்ணாகுளம் ஜங்சன் - டாடாநகர் ஜங்சன் 28 & 30ம் தேதிகளில் வசதியான ஏதேனு ஒரு இடத்தில் 1 மணிநேரம் நிறுத்தி செல்லப்படும். ரயில் எண்.13352 ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் 28 & 30 தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்சன்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 28 மற்றும் 30 ம் தேதிகளில் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...