கோவையில் அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி மற்றும் கோபி செல்லும் அரசு பேருந்துகளில் மேற்கூறையின் கீழ் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதிப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாலை நேரத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.



இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரி செட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.



பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்தனர்.



அதில் ஒரு பயணி பேருந்துக்குள் குடையை வைத்து அமர்ந்து பயணம் செய்தது சக பயணிகளிடையே வியப்படையச் செய்தது.



அதேபோன்று கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து கோபி செல்லும் அரசு பேருந்தில் பேருந்தின் மேற்கூரையிலிருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நின்றவாறு பயணம் செய்தனர். மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததன் காரணமாக மழை நீர் வழிந்ததை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பயணம் செய்தனர்.

மழைக்காலங்களில் இவ்வாறு அரசு பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதால் கடும் அவதிக்குள்ளாவதாக சக பயணிகள் கடிந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...