பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

வனபகுதிகளில் உள்ள 32 பீட் பகுதிகளில், ஒரு பீட் பகுதிக்கு ஒரு வனவர், வனக்காப்பாளர் மற்றும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் என நான்கு பேர் வீதம் மொத்தம் 128 வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் உடுமலை அமராவதி என 6 வனச்சரங்கள் உள்ளன. இந்தப் வனபகுதிகளில் உள்ள 32 பீட் பகுதிகளில் ஒரு பீட் பகுதிக்கு ஒரு வனவர், வனக்காப்பாளர் மற்றும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் என நான்கு பேர் வீதம் மொத்தம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 128 வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த கணக்கெடுப்பு பணியானது இன்று தொடங்கி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும், பின்பு மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் இந்த கணக்கெடுப்பு பணி ஒப்படைக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த யானைகள் கணக்கெடுப்பில் வனத்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் வனத்துறையினர் மட்டுமே இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...