கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்த 4 பேர் கைது

74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போலி மதுவா அல்லது டாஸ்மாக் கடையில் வாங்கியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.



Coimbatore: சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று முன்தினம் (மே.22) இருகூர் ,ஏ.ஜி. புதூரில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், பில்லு வலசை சேர்ந்த பிரபு (வயது 35) கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் இருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சின்னியம்பாளையம் டாஸ்மாக் கடை எண்:1840 அருகே உள்ள பெட்டி கடையில் நேற்று (மே.22) மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல குடியைச் சேர்ந்த காளிதாஸ் (48) பிரவீன் குமார் (24) ஆகியோர் கைது செய்தனர். பின்னர் 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் போலி மதுவா? டாஸ்மாக் கடையில் வாங்கியதா?என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...