கோவை- கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தும் வழித்தடங்களில் தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது- மாவட்ட வழங்கல் அதிகாரி தகவல்


கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படும் 18 வழித் தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழிகளில்  தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் செல்லும் பயணிகள் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தில் நின்று இருந்த திருச்சூர் பயணிகள் ரயிலை சோதனையிட்டனர்.

அப்போது சிறு, சிறு மூட்டைகளாக 1.5 டன் அளவிற்கு ரேசன் அரிசி பயணிகளின் இருக்கைகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 1.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். எனினும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யாரும் சிக்கவில்லை.

இந்நிலையில் இந்த சோதனை தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், திருச்சூர் செல்லும் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டு ரேசன் அரிசியை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.

மேலும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி அதிகளவு கடத்தப்படுவதாகவும், கோவையில் இருந்து கேரளாவிற்கு அரிசி கடத்தப்படும் 18 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த 18 வழித்தடங்களில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தற்போது நடைபெற்றுள்ள இந்த சோதனையில் கடத்தல்காரர்கள் யாரும் சிக்கவில்லை எனவும் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...