குண்டடம் அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி பலி - 3 பேர் மீது வழக்கு

நல்லூரில் முள்புதர்களை அகற்றி தோட்டத்தில் போட்டது தொடர்பான தகராறில் சண்முகம் என்பவரின் குடும்பத்தினர் பழனிசாமி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அருகே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டடம் அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமிகவுண்டர். இவரது மகன் பழனிசாமி(58). விவசாயியான இவரின் நிலத்தில் நேற்று, மதியம் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம்(35) என்பவர் முற்புதர்களை அகற்றி போட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு வந்த பழனிசாமி, எனது நிலத்தில் ஏன் முற்செடிகளை போடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதே நேரம் அங்கு வந்த சண்முகத்தின் தந்தை குப்புசாமி, தாய் வள்ளியாத்தாள்(55) ஆகியோரும் பழனிசாமியுடன் தகராறு செய்துள்ளனர். தகராறு கைகலப்பாக மாறவே இரு தரப்புக்‌கும் இடையே தள்ளுமுள்ளு ஏறபட்டு பழனிசாமியை சண்முகம் தரப்பினர் தடியைக் கொண்டு தாக்கியதாக தெரிகிறது. இதில் பழனிசாமி கையில் ரத்த காயம் ஏற்பட்டு பதற்றத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

பின்னர் அவரை அவரது மனைவி கைத்தாங்கலாக அழைத்துச் சென்‌று வீட்டில் படுக்க வைத்தார். ஆனால் சிறிது நேரத்தில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பழனிசாமியின் மனைவி யசோதா குண்டடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சண்முகம், அவரது தந்தை குப்புசாமி, தாயார் வள்ளியம்மாள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நிலத்தில் முள் போட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பினால் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி இறந்த சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்‌தியுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...