கோவை KMCH மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - சுகாதாரத்துறையிடம் ரகுநாத் என்பவர் மனு..!

கேஎம்சிஎச் மருத்துவமனையை மூடி, மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய் வேண்டும் என்று கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவையில் உள்ள கேஎம்சிஎச் என்ற தனியார் மருத்துவமனையில், ராஜா என்பவர் மருத்துவமனை ஊழியர்களாலும், காவலர்களாலும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் மருத்துவமனை காவலர், நிர்வாகிகள் என 8 பேர் கைது செய்யப்பட்டு, நேற்று மே.29 கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரசு சார்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனை விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், மேலும் மருத்துவமனையை மூட வேண்டுமெனவும் வலியுறுத்தி கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் இன்று மே.30 மனு அளித்துள்ளார்.

இது குறித்து மனுதாரர் ரகுநாத் கூறுகையில், உயிரை காப்பாற்ற கூடிய இடத்தில் இருக்கும் மருத்துவமனையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவத்தில் மருத்துவத்துறை சார்ந்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய அவர், துறை சார்ந்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வது மட்டுமல்லாமல் அந்த மருத்துவமனையை மூட வேண்டும் என்று தெரிவித்த அவர், இது போன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவு என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...