கட்சி பிரதிநிதி போல மாவட்ட ஆட்சியர் பேசுவதாக மனுதாரர் புகார்!

கோவையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், டாஸ்மாக் கடை அமைக்க அனுமதித்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலால் மனு அளிக்க வந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த 153 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், மூலடப்பட்ட கடைகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.



இக்கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் பகுதி பொதுமக்கள் மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுவினை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இராமநாதபுரம் 75-வது வார்டு மணிகண்டன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கோவையில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 



ஆனால், மூடப்பட்ட மதுபானக்கடைகளில் தொடர்ந்து மறைமுகமாக மது விற்பனை நடந்து வருகிறது. இராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடை, நஞ்சுண்டாபுரம், புளியகுளம், 80 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து மது விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளித்த போது, "மூடப்பட்ட மதுபானக்கடைகளுக்கு பதிலாக புதிய மதுபானக்கடைகளை திறந்தால் தான் சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்" என ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 



மாவட்ட ஆட்சியரின் இந்த பதில், கட்சி பிரதிநிதி போல உள்ளது என புகார் தெரிவித்தார்.

இதேபோல ஒண்டிப்புதூர், காளப்பட்டி, ரத்தினபுரி, பாப்பநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புதிதாக மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம், மதுபானக்கடைகளை திறப்பதில் மட்டும் முனைப்புடன் செயல்படுவதாக புகார் தெரிவித்த பெண்கள், மதுபானக்கடைகளினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மதுபானக்கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர். மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரேநாளில் ஏராளமான பகுதி பொதுமக்கள் நடத்திய போராட்டங்களினால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...