கோவையில் மாலை நேரம் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கோவையில் மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை வெப்பத்தை தணித்து இதமான சூழ்நிலையை உருவாக்கியது.


கோவை: கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவையில் பரவலாக மழை பெய்துவந்ததால் அக்கிணி நட்சத்திரம் பாதிப்பு இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் கோவையில் மீண்டும் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்குமேல் கோவையில் பல்வேறு பகுதிகளிலும் கார்மேகங்கள் சூழ்ந்து இதமான காற்று வீசதுவங்கியது.

மேலும் மாலை 7 மணிக்குமேல் கோவை காந்திபுரம், இரயில்நிலையம், டவுண்ஹால், உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியதும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் பணிகள் முடித்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் சாலைகளில் குடைகளை பிடித்தவாறு நடந்து செல்வதை பார்க்கமுடிந்தது.

மேலும் கோவையில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...