கோவையில் அண்ணாமலை தோல்வி - ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வைத்து பெரியார் திராவிடர் கழகத்தினர் கொண்டாட்டம்

காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற ஆட்டுக்கறி பிரியாணி விருந்தில் பல்வேறு திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களும், அமைப்பினரும் கலந்து கொண்டனர்.


கோவை: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை திமுகவினர் பலரும் நேற்று முதல் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு இடங்களில் ஆட்டுக்கறி பிரியாணியை பொதுமக்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில், கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாமலையின் தோல்வி மற்றும் பாஜகவின் தோல்வியை கொண்டாடும் விதமாக ஆட்டுக்கறி பிரியாணி விருந்து படைத்து கொண்டாடினர்.



காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் பல்வேறு திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...